கோவையில் வசிக்கும் ஜெயலலிதாவின் பள்ளி தோழி பகிரும் நினைவுகள்!


மறைந்த தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுடன் பள்ளியில் பயின்ற தோழி  கோவையில் உள்ளார். அவர் தனது பழைய நினைவுகளை கண்ணீர் மல்க கூறினார்.

மறைந்த முன்னாள் நடிகையும், பாடகியுமான யூ.ஆர்.ஜீவரத்தினம் அவர்களின் மூத்த மகள் அனுராதா. தற்போது 70 வயதாகும் அனுராதா ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்று கோவை இடிகரையில் வசித்து வருகிறார். 



இவர் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடனான பள்ளி வாழ்க்கை குறித்து  கூறியதாவது :- 

'நாங்கள் பிரசண்டேசன் கான்வெண்ட் சர்ச் பார்க் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை ஒன்றாக படித்தோம். நல்ல குணம் படைத்தவர் ஜெயலலிதா. படிப்பிலும் அப்படித்தான்.பள்ளியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி ஒன்றில்  அவருடன்  சேர்ந்து நடனம் ஆடியுள்ளேன். எப்போதும் சைவ உணவு வகைகளையே உண்ணும் பழக்கம் உள்ளவர் அவர். 

10ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற அவர் பி.யூ.சி படிப்புக்காக ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு செல்வதாக கூறிச்சென்றார். ஆனால் அவரால் படிப்பை தொடரமுடியவில்லை. அவர் படங்களில் நடிக்க ஆரம்பித்த போது நான் என் குடும்பத்தோடு சென்று படங்களை பார்ப்பேன். 

பள்ளியில் என்னுடன் எப்படி பேசி பழகினாரோ படங்களிலும் அவ்வாறே தெரிந்தார். அவரது நடிப்புத்திறமையை பார்த்து வியந்து போவேன். ஜெயலலிதாவின் மறைவுச் செய்தியை அறிந்ததும் மிகவும் உடைந்து போனேன், ஈடுகட்ட முடியாத இழப்பு!'

 

ஒவ்வொரு வார்த்தையின் முடிவிலும் தனது சோகத்தை கண்ணீரால் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார் நம் 'அம்மா'வின் தோழி, அனுராதா.

Newsletter

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...