வாட்சப்பில் ஜெ.குறித்து வதந்தி கிளப்பிய வழக்கறிஞரை கைது செய்ய கோரி சமூக விழிப்புணர்வு இயக்கம் மனு

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் என்று தன்னை கூறிக்கொண்ட கிருஷண மூர்த்தி என்பவர், நேற்று ஜெயலலிதா குறித்தும், சசிகலா குறித்தும் அவதூறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புவதாக குற்றம் சாட்டி, சமூக விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவரும் வழக்கறிஞருமான சாக்ரடீஸ் இன்று கோவை மாநகர  காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.



இது குறித்து வழக்கறிஞர் சாக்ரடீஸ் கூறியதாவது :- 

தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் என்று சொல்லிக்கொண்டு கிருஷ்ண மூர்த்தி என்பவர் சமூக வலைதளங்கள்  மூலம் பொய்யான பிரச்சரத்தை  செய்துவருகிறார். இதனால், நீதிமன்றத்தில் நேற்று கலவரம் ஏற்பட நேர்ந்தது.

 மேலும் மன்னார் குடியில் வாழும் மக்களை மற்ற மக்கள் தவறாக எண்ணும் விதமாக அவரது பிரச்சாரம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவர் போலி டாக்டராக பணியாற்றி கைதுசெய்யப்பட்டர். 2009ல் மதுரை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவு செய்யாமல் வாதாடியதாக வழக்கு உள்ளது. மேலும், அவர்   சட்டக்கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர் அதனால் அவர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக இருக்க வாய்ப்பே இல்லை. இது குறித்து விசாரணை நடத்தி  கிருஷ்ண மூர்த்தியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...