மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதை கண்டித்து அதிமுகவினர் சாலை மறியல்

கோவை, 48வது வார்டுக்குட்பட்ட ரத்தினபுரி 7வீதியில் திமுகவின் வட்ட செயலாளர் செல்வமணி என்பவர் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதை கண்டித்து அதிமுக வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.




கோவை, ரத்தினபுரி பகுதியில் 48வது வார்டின் திமுகவின் வட்ட செயலாளராக பதவி வகித்து வருபவர் செல்வமணி. இவர் அண்மையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை குறித்து அவதூறாக பேசி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதி அதிமுக மாமன்ற உறுப்பினரும் மாநகராட்சி நிதி குழு தலைவருமான பிரபாகரன் தலைமையில் 70க்கும் மேற்பட்ட அதிமுக வினர் 48வது வட்ட திமுக அலுவலகம் முன்பாக போரட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திடீர் சாலை மறியலிலும் அவர்கள் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. எனினும் மறைந்த ஜெயலலிதா குறித்து அவதூறு பேசிய திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக வினர் ரத்தினபுரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Newsletter

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...