சிறந்த மாநகராட்சி சேவைக்காக' டிஜிட்டல் இந்தியா' விருது பெற்ற கோவை மாநகராட்சி ஆணையர்



மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன்படி, மாநகராட்சியில் கவனிப்பாரற்று உள்ள குப்பைத் தொட்டிகள், சிதிலமடைந்த சாலைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதற்காக என பல திட்டங்கள் டிஜிட்டல் வழியில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு அதில் வரும் புகார்களுக்கு உடனடி தீர்வுகளை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் மேற்கொண்டார்.

மேலும், பல திட்டங்களுக்கு வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்து ஏராளமான தகவல்கள் மற்றும் நலத்திட்டங்களை நடைமுறையில் கொண்டுவந்துள்ளார்.



இதனை பாராட்டும் வகையில், மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா விருது 2016 கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்திகேயனுக்கு திங்களன்று வழங்கப்பட்டது.

புதுதில்லியில் அமைந்துள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் மின்னணு, தகவல் தொழில்நுட்பம், சட்டம் மற்றும் நிதித்துறை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் மின்னணு தகவல் தொழில்நுட்பம், சட்டம் மற்றும் நிதித்துறை மத்திய இணை அமைச்சர் பி.பி.சௌதிரி ஆகியோர் இணைந்து கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர்க்கு டிஜிட்டல் இந்தியா வெள்ளி விருது வழங்கினர்.

இந்நிகழ்வின் போது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் அருணா சுந்தரராஜன், கூடுதல் செயலாளர் அஜய்குமார், மத்திய தகவலியல் மைய தலைமை இயக்குநர் நீட்டா வெர்மா மற்றும் தொழில்நுட்ப இயக்குநர் அல்கா மிஸ்ரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மேலும், இந்நிகழ்ச்சியில் பிரதம மந்திரியின் கிராம சதக் யோஜனா விருதும் கோவை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

கோவை நகர மாநகராட்சி மட்டுமே குடிமக்களின் பங்களிப்புடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ள நகரமாகும். இது கோவை வாழ் மக்களுக்கு ஒரு பெருமைமிகு தருணம். நம்முடைய மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் அதற்கு ஒரு அடித்தளத்தை அமைத்துள்ளார். அதுமட்டுமின்றி அனைவரும் மாநகராட்சியின் மேம்பாட்டில் பங்கேற்க ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளார்.

கோவை மாநகராட்சிக்கு 26 திட்டம் சார்ந்த வாட்ஸ்அப் குழுக்கள் உள்ளது. அக்குழுக்கள் மூலம் தற்போதுவரை 40 திட்டங்கள் குடிமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் நிரைவேற்றப்பட்டுள்ளது.

இவை அனைத்திற்கும் காரணம், கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன், பல்வேறு கட்ட குடிமக்களுடன் இணைந்து பணியாற்றுவதே ஆகும்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...