வ.ஊ.சி. உயிரியல் பூங்காவை பராமரிப்பு மற்றும் புதுப்பிக்கும் பணிகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் மாநகராட்சி வ.ஊ.சி. உயிரியல் பூங்காவை பராமரிப்பு மற்றும் புதுப்பிக்கும் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில்:- "கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட நேரு விளையாட்டு அரங்கம் அருகில் வ.ஊ.சி. உயிரியல் பூங்கா உள்ளது. இந்த வ.ஊ.சி. உயிரியல் பூங்காவை பராமரிப்பு மற்றும் புதுப்பிக்கும் பணிகள் தொடர்பாக கோவை மாவட்ட வன அலுவலர், கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள், பூங்கா வடிவமைப்பாளர் மற்றும் மாநகராட்சி அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வ.ஊ.சி. உயிரியல் பூங்காவை பொது மக்களை கவரும் விதத்தில் தரம் உயர்த்தவும், புதுப்பொலிவுடனும் தாவரவியல் மற்றும் உயிரியல் பூங்காவாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இக்கூட்டத்தில் வ.ஊ.சி. உயிரியல் பூங்காவை புதுப்பிப்பதற்காக பூங்கா வடிவமைப்பு ஆலோசகர் கே.சிரில் ரூப்ஸ் செயல்திட்ட அறிக்கை பற்றி விளக்கிக் கூறினார். பூங்காவை புதுப்பிப்பதற்கான முதல் தொகுதி செயல் திட்ட அறிக்கை அனுப்பி ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இரண்டாம் தொகுதி செயல் திட்ட அறிக்கை விரைவில் அனுப்பப்படவுள்ளது. மேலும், இரண்டாம் தொகுதி செயல் திட்ட அறிக்கையில் பூங்கா கட்டமைப்பு வசதிகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு மூலம் செயல்படுத்தப்படும்.

மேலும், கட்டமைப்பு வசதிகளுக்குத் தேவையான நிதி ஆதாரத்தை பற்றி கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும். மேலும், மத்திய பூங்காவில் அதிகாரகளின் ஒப்புதல் பெற்றப்பின் நகராட்சி நிர்வாக ஆணையர் அனுமதியுடன் வேலையை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது." இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார். 

இக்கூட்டத்தில், கோவை மாவட்ட வன அலுவலர் ராமசுப்ரமணியன், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, வனத்துறை துணை இயக்குநர் மற்றும் கால்நடை அலுவலர் மனோகரன், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் பெருமாள்சாமி, பூங்கா வடிவமைப்பு ஆலோசகர் கே.சிரில் ரூப்ஸ், நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், நகரமைப்பு அலுவலர் ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...