குடிபோதைக்காக தொடர் வாகனத்திருட்டில் ஈடுபட்டவரை கைது செய்த காவல் துறையினர்


கோவை மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களாக காட்டூர், சரவணம்பட்டி, சாய்பாபா காலனி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான இருசக்கர வாகனத்திருட்டு தொடர்ந்து ஏற்பட்டு வந்தது. இதில், குற்றவாளியைப் பிடிப்பதில் காவல் துறையினர் மத்தியில் தாமதம் ஏற்பட்டு வந்தது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், சமீபத்தில் மேட்டுப்பாளையம் சாலையில் உணவு விடுதி ஒன்றில் இருசக்கர வாகனத் திருட்டு ஏற்பட்டது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட சாய்பாபா காலனி காவல் துறையினர் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரித்தனர். 

இதில், வாகனத் திருட்டில் ஈடுபட்டவரின் முகம் தெரிந்ததைத் தொடர்த்து, திருட்டில் ஈடுபட்டவரை காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவரது பெயர் முகமது ரஃபீக் (43) என்பதும், துடியலூரில் செல்போன் கடை நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.

செல்போன் கடையில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக வாகனத்திருட்டில் ஈடுபட்டதாகவும், அதனை 1000, 500 ரூபாய்க்கு விற்று மது அருந்தி  வந்ததும் தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, திருடப்பட்ட 5 இருசக்கர வாகனங்களை மீட்ட காவல் துறையினர், தொடர்ந்து மேலும் இவரால் இதுபோல் வேறு வாகனங்கள் திருடப்பட்டுள்ளதா? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...