குடிபோதைக்காக தொடர் வாகனத்திருட்டில் ஈடுபட்டவரை கைது செய்த காவல் துறையினர்


கோவை மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களாக காட்டூர், சரவணம்பட்டி, சாய்பாபா காலனி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான இருசக்கர வாகனத்திருட்டு தொடர்ந்து ஏற்பட்டு வந்தது. இதில், குற்றவாளியைப் பிடிப்பதில் காவல் துறையினர் மத்தியில் தாமதம் ஏற்பட்டு வந்தது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், சமீபத்தில் மேட்டுப்பாளையம் சாலையில் உணவு விடுதி ஒன்றில் இருசக்கர வாகனத் திருட்டு ஏற்பட்டது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட சாய்பாபா காலனி காவல் துறையினர் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரித்தனர். 

இதில், வாகனத் திருட்டில் ஈடுபட்டவரின் முகம் தெரிந்ததைத் தொடர்த்து, திருட்டில் ஈடுபட்டவரை காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவரது பெயர் முகமது ரஃபீக் (43) என்பதும், துடியலூரில் செல்போன் கடை நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.

செல்போன் கடையில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக வாகனத்திருட்டில் ஈடுபட்டதாகவும், அதனை 1000, 500 ரூபாய்க்கு விற்று மது அருந்தி  வந்ததும் தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, திருடப்பட்ட 5 இருசக்கர வாகனங்களை மீட்ட காவல் துறையினர், தொடர்ந்து மேலும் இவரால் இதுபோல் வேறு வாகனங்கள் திருடப்பட்டுள்ளதா? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...