ரயில்பெட்டியில் உள்ள கழிப்பறையில் ஆண் பிணம் - காவல் துறையினர் விசாரணை


மங்களூரிலிருந்து ஹைதராபாத் அருகே உள்ள கச்சிகோடு வரை செல்லும் 17655 விரைவு ரயில் வண்டி இன்று காலை கோவை ரயில் நிலையத்தை வந்தடைந்தது.

அப்போது, ரயில் கழிப்பறை ஒன்று தாழிடப்பட்டு திறக்க முடியாததால் பயணிகளில் ஒருவர் புகார் அளித்துள்ளார். அங்கு வந்த ஊழியர்கள் கழிப்பறையின் உள்ளே ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு கதவை திறந்து பார்த்தபோது அவர் இறந்து கிடப்பது தெரிய வந்த்து.

இதுகுறித்து ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு வந்த ரயில்வே காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் இறந்தவர் கடலூரை சேர்ந்த செல்வம் (49) என்பதும், லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்ததாகவும், கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சொந்த ஊரான கடலூருக்கு செல்ல ரயில் பயணசீட்டு பெற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், இன்று காலை 4.15 மணியளவில் கழிப்பறைக்கு சென்றபோது மாரடைப்பால் அவர் மரணமடைந்தது விசாரணையில் தெரியவந்தது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...