ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத் துவக்க விழா


ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும்  அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத் துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் இராதிகா வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதன்மைச் செயல் அதிகாரி சுந்தரராமன் நாட்டு நலப்பணித் திட்டத்தின் நோக்கம், மாணவர்கள் சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய செயல்பாடுகள் குறித்தும்;  மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தலைமை உரையாற்றினார்.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர் ஆளுமைப்பண்பு மற்றும் மத்திய அரசின்  சுகாதாரத் திட்டமான “சுவச் பாரத் அபியான்” என்பதன் கீழ் சுகாதார மேலாண்மை குறித்தும், நகரத்தை எவ்வாறு சுகாதாரமாக வைத்துக் கொள்வது? மக்கும் குப்பை, மக்காத குப்பையை எவ்வாறு தரம் பிரிப்பது? என்று மாணவர்களுக்கு எடுத்துரைத்து சிறப்புரை ஆற்றினார்.

கோவை மாவட்ட இளைஞர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் அழகர்சாமி  பேரிடர் மேலாண்மை, இரத்த தான முகாம் குறித்துச் சிறப்புரை ஆற்றினார். நடப்பாண்டு நாட்டுநலப்பணித்திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கச் செயல்பாடுகள் குறித்து கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் பாலாஜி உரையாற்றினார். இளைஞர் செஞ்சிலுவைச் சங்கக் திட்ட அலுவலர் குமரேசன் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...