பெப்சி, கோக் உள்ளிட்ட பன்னாட்டு குளிர்பானங்களை சாலையில் கொட்டி கோவை மாணவர்கள் போராட்டம்

கோவை அருகே ஐல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெப்சி, கோக் உள்ளிட்ட பன்னாட்டு குளிர்பானங்களை சாலையில் கொட்டியும், உடைத்தும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொளுத்தும் வெயில், கொட்டும்பனி உள்ளிட்டவற்றை பொருட்படுத்தாமல் இரவு- பகலாக கோவை வஉசி மைதானத்தில் திரண்டுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து 3வது நாளாக இன்று 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அமைதி போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதன் காரணமாக கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதால் போராட்டக் களத்தில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனிடையே, இன்று கோவையில் நடைபெற்று வரும் போராட்டக்களத்திற்கு வந்த திரைப்பட இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, ஐல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம் நடத்தினார்.

தமிழின அடையாளத்தை பாதுகாக்கும் வகையில் போராட்டத்தில் நடந்து வரும் இளைஞர்களின் போராட்டம், ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வரும் வரை தொடருமென போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து இளைஞர்கள் வஉசி மைதானத்தில் திரண்டு வருவதால் கோவை - அவிநாசி சாலையில் போக்குவரத்து முடங்கியுள்ளது. 

இதனிடையே, கோவையை அடுத்த திருமலையாம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அமெரிக்க குளிர்பானங்களான பெப்சி, கோக் உள்ளிட்ட குளிர்பானங்களை சாலையில் கொட்டியும், உடைத்தும் போராட்டம் நடத்தினர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...