ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வால்பாறை கல்லூரி மாணவர்கள்

வால்பாறையில் பாரதியார் பல்கலைக் கழகத்தால் செயல்பட்டுவரும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டம் குறித்து கவனம் செலுத்தாமல் உள்ள மத்திய, மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் கல்லூரி வளாகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 





இதில் "தடை செய் தடை செய் பீட்டா அமைப்பை தடை செய்", "அனுமதி கொடு அனுமதி கொடு ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி கொடு" போன்ற முழக்கங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் கூறுகையில், தமிழர்களின் பண்பாட்டை சீர்குலைக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் ஜல்லிக்கட்டை தடை செய்துள்ளது. இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. 

உடனடியாக மத்திய, மாநில அரசுகள் அவசர சட்டம் இயற்றி பீட்டா அமைப்பை தடை செய்வதோடு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியும் வழங்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். 

இது குறித்து மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி வழங்கும் வரை போராட்டங்கள் தொடரும் என்றும் அவர்கள் கூறினர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...