'மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பற்ற தன்மையே இளைஞர்களின் போராட்டத்திற்கு காரணம்', மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கோவையில் பேட்டி.



ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நடைபெறும் இளைஞர்களின் போராட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பற்ற தன்மையே காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டியுள்ளார்.

கோவையில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இளைஞர்களின் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிப்பதுடன், மதிப்பளிப்பதாகவும் தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு தொடர்பான  அவசர சட்ட நடவடிக்கையை மத்திய, மாநில அரசகள் ஏன் முன்னதாகவே எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பிவர், நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் மிருகவதை தடை சட்டத்தில் அடிப்படையிலேயே திருத்தம் கொண்டு வந்திருக்கலாம் என்றார். இளைஞர்களின் கோரிக்கையான ஜல்லிக்கட்டிற்கு நிரந்தர தீர்வு,  சட்டத்திருத்தம் தேவை என்று வலியுறுத்திய அவர், இளைஞர்களின் இந்த எழுச்சி போராட்டம் மக்களின் வாழ்வாதார பிரச்சனைக்கும் தேவை என்றார்.

கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே புதிதாக தடுப்பணை கட்டும் விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் பொதுப்பணித்துறையின் ஆய்வு அறிக்கையை தெரிவிக்க வேண்டும்எ ன்று கேட்டுக்கொண்ட அவர் தடுப்பணை கட்டுவது உண்மை என்ற பட்சத்தில் மாநில அரசின் மக்கள் பிரச்சினைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உடன் இருக்கும் எனவும் கூறினார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...