'பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசின் நடவடிக்கையை கண்டித்து', அனைத்து கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம்

பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசின் நடவடிக்கையை கண்டித்து கோவை காந்தி புரத்தில் அனைத்து கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த மனித சங்கிலிபோராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் பவானி ஆறு கேரள மாநிலத்திற்குள் சென்று மீண்டும் அட்டப்பாடி அருகே தமிழகப்பகுதிக்குள் நுழைகின்றது. இந்நிலையில் கேரள பகுதிக்குள் பவானி ஆற்றின் குறுக்கே 6 இடங்களில் தடுப்பணை கட்ட திட்டமிட்டுள்ள கேரள அரசு, இரண்டு இடங்களில் கட்டுமானப்பணிகளை துவங்கியுள்ளது. இந்நிலையில் கேரள அரசின் இந்த நடவடிக்கையினை தடுத்து நிறுத்த கோரி கோவை காந்தி புரத்தில் அனைத்துகட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது.

தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த மனித சங்கிலி போராட்டத்தில் திமுக ,கொங்குநாடு ஜனநாயக கட்சி, தமிழ் புலிகள், தமிழர் விடுதலை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் மற்றும் சமூக இயக்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். மனித சங்கிலி போராட்டதின் போது பேட்டியளித்த திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, பவானி ஆற்று பிரச்சினையில் தமிழக அரசு உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அணை கட்டப்படுவதை தடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அணை கட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினையும், விவசாய பிரச்சினையும் ஏற்படும் எனவும்  பொது மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் எனவும் தந்தை பெரியார் திராவிடகழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

அணை கட்டப்படுவதை தடுக்காவிட்டால் வரும் 29ம் தேதி அனைத்து கட்சியினருடன் சென்று அணை கட்டப்படும் இடத்தை முற்றுகையிடப் போவதாகவும் அதனை தொடந்து மாணவர்களை திரட்டி கேரள அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த மனித சங்கிலி போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கேரள அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...