வ.உ.சி அடுத்து காந்திபுரம் பேருந்து நிலையத்தில் களமிறங்கிய ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள்


ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்டுள்ள தடையினை நிரந்தரமாக நீக்க வேண்டும் என வலியுறுத்தி அமைதியான முறையில் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களை இன்று காவல் துறையினர் திடீரென தாக்குதல் நடத்தி போராட்டத்தை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

காவல் துறையினரின் இந்த கொடூரமான தாக்குதலால் தமிழகம் முழுவதும் தற்போது போர்க்களமாக காட்சியளித்து வருகிறது.

கோவை வ.உ.சி மைதானத்தில் கடந்த ஒருவார காலமாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள், இளைஞர்களை விரட்டும் முயற்சியில் இன்று காலை காவல்துறையினர் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.



இதனால், சிதறியோடிய இளைஞர்களும், மாணவர்களும் கோவையின் முக்கிய பேருந்து நிலையமான காந்திபுரம் பேருந்து நிலையத்தில் மீண்டும் தர்ணாவில் ஈடுபட்டனர்.



இதனைத்தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.









மேலும், தங்களுடைய அமைதியான போராட்டத்தை சீர்குலைத்து எங்கள் மீது கொடூரமான தாக்குதலை நடத்தும் காவல்துறையை கண்டிப்பதாக தெரிவித்த இளைஞர்கள் பேருந்துநிலையத்தில் இருந்த ஒரு பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.



இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கடுமையாக தாக்கியதில் தற்போது அந்த இளைஞர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்

இதனால்,காந்திபுரம் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...