மாணவர் போராட்டத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை வேண்டும்- அன்புமணி இராமதாஸ்


மாணவர் போராட்டத்தில் கலவரம் நடந்தது தொடர்பாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும், அதற்காக பா.ம.க நீதிமன்றம் செல்லும் எனவும் அக்கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பா.ம.க மாநில இளைஞரணி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பாரதியார் பல்கலைகழகம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவைக்கு வருகை தந்தார். 

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜல்லிக்கட்டிற்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்தார். 

தமிழ்நாடு முழுவதும் அமைதியாக நடந்த மாணவர் போராட்டத்திற்கு கலங்கம் ஏற்படுத்த காவல் துறையினர் திட்டமிட்டு கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி இருப்பதாகவும், சென்னையில் நடந்த கலவரத்திற்கு காவல் துறை தான் காரணம் எனவும் அவர் குற்றம்சாட்டினார். 

மேலும், ஆளும் கட்சிக்குள் உள்ள பிரச்சனைகளை மறைக்க இந்த தாக்குதல் நடந்து இருக்கலாம் எனவும், காவல் துறையினரே ஆட்டோ, குடிசை, வாகனங்களை கொளுத்தும் காட்சிகள் வெளியாகி இருப்பதாகவும், சமூக விரோதிகள் கலவரத்தை தூண்டி விட்டதாகவும் அவர் தெரிவித்தார். 

மேலும், கலவரம் தொடர்பாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும் அல்லது சி.பி.ஐ விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளியாகும் எனவும் கூறிய அவர், அதற்காக பா.ம.க நீதிமன்றம் செல்லும் என தெரிவித்தார். 

கோவையை பொருத்த வரை அத்திக்கடவு- அவிநாசி, பண்டியாறு- புன்னம்புழா மற்றும் அட்டப்பாடியில் கேரள அரசு அணைக்கட்டுதல் ஆகிய 3 பிரச்சனைகள் இருப்பதாக குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் நீர் மேலாண்மையை மேம்படுத்த வேண்டியது அவசியம் என தெரிவித்தார். 

மத்திய பா.ஜ.க அரசு அடுத்த ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கர்நாடக அரசிற்கு சாதகமாக செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். 

பவானி ஆற்றில் கேரள அரசு அணைக்கட்டுதல், காவிரி  பிரச்சனை உள்ளிட்ட நதிநீர் பிரச்சனைகளுக்கு அனைத்து கட்சி கூட்டங்களை கூட்டி, பிரதமரை சந்தித்து அழுத்தம் தந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...