கனடாவில் பணிபுரிந்து வந்த சகோதரரைக் காணவில்லை என அவரது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு


கனடாவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தனது சகோதரர் மாயமாகி விட்டதாகவும், இந்திய வெளியுறவுத் துறை மூலம் தனது சகோதரனை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோவை சூலூர் பகுதியை சேர்ந்த அவரது தங்கை மற்றும் தந்தை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.



கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரோத்தாஸ் சிங் தாலா. டெல்லியை சேர்ந்த இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கோவை மாவட்டம் சூலூரில் வசித்து வருகின்றார்.

இவரது இளைய மகன் கார்த்திக் சவுத்ரி (25) மும்பையை சேர்ந்த ஆங்கிலோ ஈஸ்டன் என்ற கப்பல் நிறுவனத்தில் கடந்த 7 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றார்.



இந்நிலையில் பணிநிமித்தமாக கனடா சென்ற கார்திக் சவுத்ரி மாயமாகிவிட்டதாக கூறப்படுகிறது. கடைசியாக டிசம்பர் மாதம் குடும்பத்தினருடன் பேசிய கார்த்திக் சவுத்ரி அதன் பின்னர் குடும்பத்தினரை தொடர்பு கொள்ளவில்லை என கூறப்படுகின்றது.

இந்நிலையில், இன்று கார்த்திக் சவுத்ரியின் தந்தை ரோத்தாஸ் சிங் மற்றும் அவரது சகோதரி மீனாட்சி ஆகியோர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் தனது சகோதரனை இந்திய வெளியுறவுத்துறை மூலம் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர்.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கார்த்திக் சவுத்தியின் சகோதரி மீனாட்சி, தனது சகோதரன் மாயமானது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறைக்கு இ-மெயில் மூலம் புகார் அளித்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட நிறுவனமும் தனது சகோதரன் குறித்து உரிய தகவல் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும், சகோதரன் பணிபுரிந்த நிறுவன ஊழியர்கள் திடீரென இறப்பு சான்றிதழ் தரும்படி கேட்பதாகவும் தெரிவித்த அவர், தனது சகோதரன் உயிரிழந்திருக்க வாய்ப்பில்லை எனவும் எனவே கனடாவில் மாயமான தனது சகோதரனை இந்திய வெளியுறவுத்துறை மூலம் மீட்க மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...