சிங்காநல்லூர் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தை மீட்டுத்தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு


சிங்காநல்லூர் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தை மீட்டுத்தரக்கோரி இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 64-வது வார்டு, சிங்காநல்லூர் உழவர் சந்தையின் பின்புறம் விளையாட்டு மைதானம் உள்ளது.

இந்த விளையாட்டு மைதானம் சில தனியார்களால் வாகனங்கள் நிறுத்துவதற்கும், கோவை மாநகராட்சியின் தெருவிளக்கு கம்பங்களை போட்டு வைக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதுமட்டுமில்லாமல் இரவு நேரங்களில் தெருவிளக்குகள் அப்பகுதியில் சரிவர இயங்குவது இல்லை. 

இதனால், அப்பகுதி மக்களும், இளைஞர்களும் விளையாட்டு மைதானத்தினை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றியும், மைதானத்தை சுற்றிவளர்ந்துள்ள புதர்களையும் அகற்றி, விளையாட்டு மைதானத்தை பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...