சங்கரா கல்லூரியில் சமையல் துறை மாணவர்களுக்கான சங்கரா மாஸ்டர் ப்ரிகேடு 2017 என்னும் சமையல் போட்டி நடைபெற்றது


தேசிய அளவிளான மாஸ்டர் ப்ரிகேடு 2017 என்னும் சமையல் துறை மாணவர்களுக்கான சமையல் போட்டி, சங்கரா கல்லூரியின் சமையல் துறை சார்பில் நடத்தப்பட்டது. இதில் இந்தியா முழுவதுமிருந்து சமையல் துறையைச் சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்று தங்களது சமையல் திறமைகளை வெளிப்படுத்தினர்.



இப்போட்டியானது பங்குபெறுவோரின் சமையல் திறன், படைப்பாற்றல் மற்றும் குழுவாக செயல்படுவது ஆகிய திறன்களை சோதிக்கும் விதமாக நடத்தப்பட்டது.



பழங்கள் மற்றும் காய்கறிகளில் சிற்பம் செதுக்குதல், இரும்பு சமையலர், போன் கிளேசியர், வினாடி-வினா போட்டி, கட்டுரை சமர்ப்பித்தல், கேக்குகள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரவுகளின் கீழ் நடத்தப்பட்ட இப்போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.



கொச்சினில் உள்ள ட்ரிடன்ட் ஓபராய் நட்சத்திர உணவு விடுதியின் தலைமை சமையலராக இருக்கம் பி.குமரன், கோவை லீ மெரிடியன் நட்சத்திர விடுதியின் தலைமை சமையலர் அப்துல் ரகுமான் ஆகியோர் மாணவர்கள் சமைத்த உணவுகளை ருசித்து சிறந்த உணவைச் சமைத்த மாணவருக்கு பரிசினை வழங்கினர்.



இதில் முதல் பரிசை பெங்களூரைச் சேர்ந்த க்ரைஸ்ட் பல்கலைக் கழக மாணவர்களும், இரண்டாம் பரிசை சென்னிஸ் விடுதி மேலாண்மை கல்லூரி மாணவர்களும் வென்றனர். சுழற்கோப்பையை க்ரைஸ்ட் பல்கலைக் கழக மாணவர்கள் வென்றனர்.

சங்கரா கல்விக் குழுமங்களின் இணைச் செயலாளர் சந்தியா ராமச்சந்திரன், துணை இணைச் செயலாளர் நித்யா ராமச்சந்திரன் மற்றும் கல்லூரியின் முதல்வர் முனைவர் எச்.பாலகிருஷ்ணன் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

Newsletter

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...