கோவை எம்.எல்.ஏ.க்களுக்கு குவியும் வாழ்த்துக்கள்


சசிகாலா மற்றும் பன்னீர் செல்வம் என அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கடும் குழப்பத்தில் இருந்தன. இந்த நிலையில், அந்ததந்த தொகுதி மக்கள் தங்கள் எம்.எல்.ஏ.க்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக இருக்க வேண்டி கூறிவந்தனர்.

சசிகலா தலைமையை பன்னீர் செல்வம்  நிராகரத்த சில மணி நேரங்களில் கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத்தொகுதி உறுப்பினர் ஆறுக்குட்டி பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக களம் இறங்கினார். தொடர்ந்து, அவரது தொகுதி மக்கள் சமூக வலைதளங்கள் மூலமாகவும், நேரடியாகவும் ஆறுக்குட்டிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆங்காங்கே ஆறுக்குட்டியை வாழ்த்தும் வகையில் விளம்பர பதாகைகளும் வைக்கப்பட்டது. 

இந்த நிலையில், கூவத்தூர் விடுதியில் தங்கியிருந்த கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. அருண்குமார் அங்கிருந்து தப்பி கோவை வந்ததாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். 

தொடர்ந்து வடக்கு சட்டமன்ற தொகுதி பொதுமக்கள் அருண்குமாருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர். சசிகலா அணிக்கு எதிராக நின்றதன் மூலமாக மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று விட்டதாகவும் பொதுமக்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில், அருண்குமார் இரு அணிக்கும் ஆதரவு தராமல் சட்டமன்ற வாக்கெடுப்பை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...