சமூக வலைத்தளங்களில் பயணியர் குறை தீர்ப்பில் தெற்கு ரயில்வேயில் சேலம் கோட்டம் முதலிடம்.

முன்பு எப்போதுமிராத அளவுக்கு இந்திய ரயில்வேயில் பயணியர் மற்றும் ரயில் உபயோகிப்போரின் குறைகள் தீர்ப்பதில் அதிக கவனம் தற்போது செலுத்தப்பட்டு வருகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு திறனாய்வுக்கூட்டங்களில் இதன் முக்கியத்துவத்தை அதிகமாக வலியுறுத்தி வருகின்றனர்.

அத்தகு கூட்டங்களில் சமூக வலைத்தளங்கள் உட்பட்ட அனைத்து குறைதெரிவிப்பு முனையங்களிலும் தெரிவிக்கப்படும் குறைகளும், அவைகள் தீர்க்கப்பட எடுத்துக் கொள்ளப்படும் கால அவகாசங்களும் சீராய்வு செய்யப்படுகின்றன. 

இந்திய ரயில்வே இவ்வாறு பெறப்பட்ட 90 சதவீத குறைகளை இது வரை தீர்த்து வந்துள்ளது. 

சமீபத்தில், ரயில்வே வாரியம் தெற்கு ரயில்வேக்கு இது குறித்த ஓர் ஆய்வறிக்கையை அனுப்பியுள்ளது. அதில், பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பெறப்பட்ட புகார்களுக்கு பதிலளிப்பிதில் தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம் மிக விரைந்து செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சேலம் கோட்டம் சமூக வலைத்தளங்கள் மூலமாக பெறப்படும் புகார்களுக்கு தெற்கு ரயில்வேயின் மற்ற கோட்டங்களை விட விரைவாக, (திருச்சி கோட்டம்-454 நிமிடங்கள், பாலக்காடு கோட்டம்-402 நிமிடங்கள், சென்னைக் கோட்டம்-151 நிமிடங்கள், திருவனந்தபுரம் கோட்டம்-82 நிமிடங்கள்)   அதாவது 12 நிமிடங்களில் பதிலளித்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் ஹரிசங்கர் வர்மா, இவ்வாறு திறமையாக செயல்பட்டு பயணிகள் குறைதீர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவரும் சேலம் கோட்ட முதுநிலை வணிகவியல் மேலாளர் விஜுவின் தலைமையிலான வணிகவியல் பிரிவு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். 

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...