பவானி ஆற்றிலிருந்து மின் மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்தால் கடும் நடவடிக்கை..!

தமிழ்நாட்டில் பருவ மழை குறைவினால் தற்போது கடும் வறட்சியும், குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வருகின்றது. அதே போல் கோவை மாவட்டத்திலும் கடுமையான வறட்சியும் குடிநீர் பற்றாக்குறையும் நிலவி வருவதுடன் அணைகளிலும் நீர்மட்டம் குறைந்துவிட்டது.

எனவே, குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்கும் பொருட்டு, பவானி ஆற்றிலிருந்து மின் மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்து வரும் விவசாயிகள் இனி வரும் காலங்களில் தண்ணீர் எடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த அறிவிப்பினை மீறி அனுமதியின்றி தண்ணீர் எடுக்கும் விவசாயிகளின் மின் மோட்டார் இணைப்புகள் துண்டிக்கப்படும். மின் மோட்டார்கள் கைப்பற்றப்படும். பாதை வரி அனுமதி ரத்து செய்யப்படும். மேலும், அபராதம் ரூ.5 ஆயிரம் வசூலிக்கப்படும்.

எனவே, பவானி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து விவசாயம் செய்யும் விவசாயிகள் இனிமேல் தண்ணீர் எடுப்பதை தவிக்குமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...