வீட்டு மனைபட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாத்திர பண்டங்களுடன் குடியேறும் போராட்டம்


கூடலூர், கவுண்டம்பாளையம் பேரூராட்சி தெக்குபாளையம் பகுதி பொதுமக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் குறை தீர்ப்பு முகாமில் பாத்திர பண்டங்களுடன் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 



இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, 22 குடும்பங்கள் இங்கு வசித்து வரும் ஓடை புறம்போக்கு 30 வருடங்களுக்கு முன்பு வகையறா மாற்றம் செய்யபட்டு புறம்போக்கு நிலத்தில் வசித்து வருவதாக கூறினர். மேலும் அருகாமையில் வசித்து வரும் நிரந்தர குடியிருப்பாளர்கள் தாங்கள் வசித்து வரும் இடத்தை ஆக்கரமித்து விளையாட்டு மைதானம் பூங்கா ஆகியவை அமைக்க முற்பட்டதை தொடர்ந்து பேரூராட்சி தலைவரிடம் முறையிட்டதை தொடர்ந்து வீட்டுமனை பட்டா வழங்க ஆட்சேபனை இல்லை என தீர்மானம் நிறைவேற்றபட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதனால், அங்கு குடிநீர் தெரு விளக்குகள் என வசதிகள் செய்து கொடுக்கபட்டதாக தெரிவித்தவர்கள் தற்போது அரசு அறிவிப்பின்படி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அப்புறபடுத்துவதின் பெயரில் வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும் விவசாய நிலமாக இருந்த போது பயன்பாட்டில் இருந்த ஓடை தற்போது குடியிருப்பாக மாறியதை தொடர்ந்து வெள்ளம் வருவதற்கான வாய்ப்பு இல்லை என கூறி தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி பாத்திர பண்டங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெட்ஷீட்களை தரையில் விரித்துபடுத்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...