நீலகிரி தேயிலை விவசாயிகளுக்கு வசதியாக குறுஞ்செய்தி சேவை துவக்கம்


இந்தியப் பிரதமர் மோடியின் 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் படி, நீலகிரி தேயிலை வாரியம் சார்பில் சிறு தேயிலை விவசாயிகள் பயனடையும் வகையில் புதிதாக குறுஞ்செய்தி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் இத்திட்டத்தினை துவக்கி வைத்து பேசுகையில், நீலகிரி தேயிலை வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 25 ஆயிரம் சிறிய தேயிலை விவசாயிகளுக்கு மாதத்திற்கு 5 முறை என குறுஞ்செய்தி அனுப்பப்படும். இதனால், விவசாயிகள் சந்தை நிலவரம் உள்ளிட்டவற்றை அறிந்துகொண்டு பயனடையலாம்" என்றார்.



இதுகுறித்து, தேயிலை வாரிய நிர்வாக இயக்குனர் பால்ராசு கூறுகையில், இத்திட்டத்தின் கீழ் தேயிலை விவசாயிகளுக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் மூலம், பச்சை இலை விலை நிலவரம், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, தர பராமரிப்பு மற்றும் மானியங்கள், சராசரி விலை உள்ளிட்ட முக்கிய குறிப்புகளை தெரிந்துகொள்ளலாம் என்றார்.

தேயிலை வாரிய துணை இயக்குனர் ஹரிபிரகாஷ் நாயர் கூறுகையில், இந்த குறுஞ்செய்தி அனுப்பும் திட்டத்தின் மூலம் வங்கி உடன் சிறிய விவசாயிகள் இணைக்கப்பட்டு அவர்களுக்கு உதவ திட்டமிடப்பட்டுள்ளது என்றார். 

இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் சரியான காலத்தில் தங்களது பணியினை செய்து லாபம் மற்றும் உற்பத்தியினை அதிகரிக்க முடியும் என தேயிலை வாரிய துணைத் தலைவர் டி.ஹெக்டே தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...