கோவை, நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் அறிவிப்பு

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு ஜூலை 15 அன்று கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை மித மழைக்கான மஞ்சள் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் இன்று (ஜூலை 15) சென்னை வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று (ஜூலை 15) இவ்விரு மாவட்டங்களுக்கும் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளைய தினம் (ஜூலை 16) கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு மித மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த மழை எச்சரிக்கையை அடுத்து, பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய இடங்களில் கவனமாக இருக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், மாவட்ட நிர்வாகம் மீட்புப் பணிகளுக்கான முன்னேற்பாடுகளை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...