கோவை சின்னவேடம்பட்டியில் குருவணக்க நாள் விழா: மன நிம்மதி, நல்ல பழக்கம், உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் நிகழ்வு

கோவை சின்னவேடம்பட்டியில் உள்ள சிரவணபுரம் கெளமார மடாலயத்தில் வரும் 21-ம் தேதி முதலாம் ஆண்டு குருவணக்க நாள் விழா நடைபெறுகிறது. இந்த விழா தற்போதைய தலைமுறைக்கு மன நிம்மதி, நல்ல பழக்கம், உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டியில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிரவணபுரம் கெளமார மடாலயத்தில் வரும் 21-ம் தேதி அன்று முதலாம் ஆண்டு குருவணக்க நாள் விழா நடைபெற உள்ளது. இந்த விழா குழந்தைகள், குடும்பங்கள், இளைஞர்கள் மற்றும் தற்போதைய தலைமுறையினர் நோய் நொடி இல்லாமல் வாழ்வில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் கல்லூரி கல்வி இயக்குனருமான குமாரசாமி கூறுகையில், "தற்போதைய தலைமுறைக்கு மன நிம்மதி, நல்ல பழக்கம், உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் இந்த குருவணக்க நாள் விழா அமையும்" என்று தெரிவித்தார்.



விழா நிகழ்ச்சிகள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதில் குருமூர்த்தம், திருக்கோயில் வழிபாடு, வள்ளிக் கும்மி, நடனம், மாயாஜால நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

மேலும், மடாலய வளாகத்தில் கண் பரிசோதனை, இரத்தப் பரிசோதனை, புத்தகக் கண்காட்சி, இயற்கை கண்காட்சிகள் போன்ற பிற நிகழ்ச்சிகளும் நடைபெறும் என கெளமார மடாலயம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...