சேலம் நாமக்கல் கரூர் சிறப்பு பயணிகள் ரயிலில் குறைந்த அளவு பயணிகளே பயணம்

சேலம் நாமக்கல் கரூர் ரயில் தடத்தில் பயணிக்கும் ரயில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று கீழ்க்கண்ட சிறப்பு பயணிகள் ரயில்கள் தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தால் இயக்கப்பட்டு வருகின்றன.

ரயில் எண் 06739- ஞாயிற்றுக் கிழமை சேவை- சேலம்- கரூர்- புறப்படும் நேரம் 06.00, வந்தடையும் நேரம் 08.10.

ரயில் எண் 06740- ஞாயிற்றுக்கிழமை சேவை- கரூர்- சேலம்- புறப்படும் நேரம் 08.30, வந்தடையும் நேரம் 10.30.

ரயில் எண் 06743- தினசரி சேவை- சேலம்- கரூர்- புறப்படும் நேரம் 11.30, வந்தடையும் நேரம் 13.30.

ரயில் எண் 06744 - தினசரி சேவை- கரூர்- சேலம் - புறப்படும் நேரம் 14.40, வந்தடையும் நேரம் 16.40

இந்த ரயில்களின் சராசரி பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக அதாவது 13 முதல் 21 சதவீதம் மட்டுமே உள்ளது. 

சிறப்பு பயணிகள் ரயில்களின் இயக்கம் போதுமான பயணிகள் எண்ணிக்கை இருந்தால் மட்டுமே தொடர இயலும். இந்த சிறப்பு ரயில்களின் இயக்கம் நிறுத்தப்பட்டால் ஞாயிற்றுக்கிழமைகளில் மற்றும் மேலே குறிப்பிட்ட நேரங்களில் வாரநாட்களிலும் இத்தடத்தில் பயணிகள் ரயில்சேவை இல்லாமல் போகும். இந்த ரயில்கள் 16.09.2015 முதல் இயக்கப்பட்டு வந்தாலும், பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே இருந்து வந்துள்ளது.

எனவே, தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் நிர்வாகம் பயணிகளை இந்த ரயிலை பெருமளவில் பயன்படுத்திக் கொள்ள முன்வருமாறு கேட்டுக் கொள்கிறது. பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து குறைவாக இருந்தால், இந்த சிறப்பு பயணிகள் ரயில்சேவைவை ரத்து செய்வதை தவிர ரயில்வே நிர்வாகத்திற்கு வேறு வழியில்லை என்பதும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...