பொள்ளாச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: 78 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

பொள்ளாச்சியில் 3.5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 78 வயது முதியவருக்கு கோவை POCSO நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ₹5.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 3.5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 78 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியின் மூன்றரை வயது மகள், தனது பாட்டியுடன் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி, இ.பி.நகரில் உள்ள ஓய்வுபெற்ற மின் வாரிய ஊழியரான முருகன் (78) வீட்டிற்கு சென்றிருந்தார். கடந்த பிப்ரவரி மாதம், வீட்டின் முதல் மாடியில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது, முருகன் அவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

இது தொடர்பாக சிறுமியின் பாட்டி பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போக்ஸோ மற்றும் பாலியல் வன்கொடுமை சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கோவை போக்ஸோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

கடந்த ஜூலை 31 ஆம் தேதி, நீதிபதி ஜி.குலசேகரன் வழங்கிய தீர்ப்பில், குற்றவாளியான முருகனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்தார். அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் ஓர் ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.5 லட்சமும், அபராதத் தொகையான ரூ.10,000-ம் சேர்த்து மொத்தம் ரூ.5.10 லட்சம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார். இந்த தீர்ப்பானது குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...

கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் து...

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...