கோவை மாநகராட்சி 1-வது வார்டில் பல்வேறு அபிவிருத்தி பணிகள்: கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் ஆய்வு

கோவை மாநகராட்சி 1-வது வார்டில் பாதாள சாக்கடை, சாலை சுத்தம், அங்கன்வாடி நடைபாதை மற்றும் வடிகால் சுத்தம் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி பணிகளை வார்டு கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சி 1-வது வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் அபிவிருத்தி பணிகளை வார்டு கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் நேரில் ஆய்வு செய்தார்.

அப்பநாயக்கன்பாளையம் ஈஸ்வர சக்தி நகர் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணியினை கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் நேரில் பார்வையிட்டார். இப்பணியினை தரமாக செய்திட வேண்டுமென ஒப்பந்ததாரரிடம் வலியுறுத்தினார்.



பார்க்சிட்டி பகுதியில் சாலையில் கழிவுகள் கொட்டப்பட்டதால் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, கவுன்சிலர் நேரில் பார்வையிட்டு அந்த பகுதியை சுத்தம் செய்ய உத்தரவிட்டார்.



அப்பநாயக்கன்பாளையம் அங்கன்வாடி பள்ளியின் முன்புறம் குழந்தைகள் நடந்து செல்வதற்காக நடைபாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.



மேலும், வார்டு முழுவதும் வடிகால் சுத்தம் செய்யும் பணிகள் மற்றும் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகளை கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...