கோவையில் கட்டுவிரியன் பாம்பு கடித்து பாம்பு பிடி வீரர் உயிரிழப்பு

கோவையில் காளப்பநாயக்கன்பாளையம் பகுதியில் கட்டுவிரியன் பாம்பு கடித்ததில் 35 வயது பாம்பு பிடி வீரர் முரளிதரன் உயிரிழந்தார். சம்பவம் நடந்த ஐந்து நிமிடங்களிலேயே உயிரிழப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் கணுவாய் பகுதியைச் சேர்ந்த 35 வயது பாம்பு பிடி வீரர் முரளிதரன், காளப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு ஒர்க்ஷாப்பில் பாம்பு புகுந்ததாக வந்த அழைப்பை அடுத்து அங்கு சென்றபோது, கட்டுவிரியன் பாம்பு கடித்ததில் உயிரிழந்தார்.

முரளிதரனுக்கு மனைவி, பள்ளி படிக்கும் ஒரு மகன் மற்றும் கல்லூரி படிக்கும் மகள் உள்ளனர். நேற்று இரவு காளப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு ஒர்க்ஷாப்பில் பாம்பு புகுந்ததாக தகவல் வந்ததை அடுத்து அங்கு சென்ற முரளிதரன், மேஜை அடியில் சுமார் மூன்று அடி நீளம் கொண்ட கட்டுவிரியன் இனத்தைச் சேர்ந்த அதிக விஷம் கொண்ட பாம்பைக் கண்டார்.



பாம்பை லாவகமாக வாலைப் பிடித்து தூக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக அது அவரைக் கடித்தது. பாம்பை பைக்குள் பிடித்து தூக்கிச் செல்ல முயன்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ், வனத்துறை மற்றும் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.



முரளிதரன் பாம்பு கடித்த இடத்தில் ரத்தத்தை வெளியேற்றினார்.



எனினும், பாம்பு கடித்து ஐந்து நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வனத்துறை மற்றும் துடியலூர் காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...