'புத்தகம் வந்த பின்தான் குரங்கிலிருந்து மனிதன் வெளிப்பட்டான்' உலக புத்தக தின விழாவில் -மரபின் மைந்தன் முத்தையா பேச்சு

உலக புத்தக தினமான இன்று கோவை ஏ.டி.டி காலனி பகுதியில் உள்ள 'தி இந்து' நாளிதழ் அலுவலகத்தில் உலக புத்தக தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. 



உலக புத்தக தினத்தையொட்டி தி இந்து-வின் பதிப்பு புத்தகங்கள் 50 சதவிகிதம் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டது. காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும் இந்நிகழ்வில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று புத்தகங்களை வாங்கிச் சென்றனர். விழாவில் மரபின் மைந்தன் முத்தையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

 

அப்போது, வாசகர்களிடையே அவர் பேசுகையில், 'குழந்தைகளுக்கு நூல்களை கண்ணில் காட்டுங்கள், அவர்கள் படிக்க மாட்டார்கள் என்பதை நாம் தீர்மானிக்க வேண்டாம். புத்தகத்தை வாசிக்க தொடங்கிய பின்னர்தான் குரங்கிலிருந்து மனிதன் வெளிப்படத் தொடங்கினான். ஒவ்வொரு புத்தகத்தையும் உங்கள் வீடுகளில் குடியேற்றும் போதும்தான் ஒரு அறிஞரை உங்கள் வீட்டுக்கு குடியேற்றுவதாக அர்த்தம்' என்றார்.

 

இவ்விழாவில் கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் சரவணன் மற்றும் 'தி இந்து' நாளிதழின் துணை மண்டல மேலாளர் ஜெகதீஸ்குமார், கோவை புத்தக திருவிழா குழுவினர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...