கோவை பேரூர் படித்துறையில் ஆடிப்பெருக்கு விழா: குவிந்த பக்தர்கள்

கோவை பேரூர் படித்துறையில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 3 அன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நொய்யல் ஆற்றங்கரையில் நேர்த்திக்கடன் செலுத்தினர். பாதுகாப்பு காரணங்களுக்காக ஆற்றில் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் உள்ள பேரூர் படித்துறையில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 3 அன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நொய்யல் ஆற்றங்கரையில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர்.

ஆடிப்பெருக்கு விழா ஆற்றங்கரைகளில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் விவசாயிகள் உழவுப் பணிகளை கடவுளை வழிபட்டு தொடங்குவர். நாடு செழிக்க தேவையான நீரைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நதியை தெய்வமாகப் போற்றி வழிபடுகின்றனர்.

இந்நாளில் தொடங்கும் செயல்கள் இனிதே நிறைவேறும் என்பது நம் முன்னோர்களின் ஐதீகம். ஆடிப்பெருக்கு நகை வாங்கவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் இல்லத்திலும் ஆற்றங்கரைகளிலும் கன்னி தெய்வங்களுக்கு வழிபாடு செய்வது வழக்கம்.

ஏராளமான பொதுமக்கள் தொடர்ந்து வருகை புரிந்து வருவதால், காவல்துறையினர் அப்பகுதியில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மழையின் காரணமாக ஆறுகளில் நீர்வரத்து எப்போது வேண்டுமானாலும் அதிகமாகலாம் என்பதால், பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...