கோவை மாவட்ட ஆட்சியர் கணியூர் ஊராட்சிக்கு சர்வதேச தர சான்றிதழ் வழங்கினார்

கோவை மாவட்டத்தில் சூலூர் ஒன்றியத்தின் கணியூர் ஊராட்சி சிறந்த செயல்பாட்டிற்காக ISO சான்றிதழ் பெற்றது. மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இந்த சான்றிதழை ஊராட்சி தலைவரிடம் வழங்கினார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (05.08.2024) ஒரு முக்கிய நிகழ்வு நடைபெற்றது. அடிப்படை தேவைகளை சிறப்பாக கையாளும் உள்ளாட்சி அமைப்புகளில், சூலூர் ஊராட்சி ஒன்றியத்தின் கணியூர் ஊராட்சி மாநில அளவில் 4-வது ஊராட்சியாகவும், மாவட்டத்தில் முதல் ஊராட்சியாகவும் தேர்வு செய்யப்பட்டது.

இதற்காக சர்வதேச தரச்சான்று சம்மேளனத்தால் வழங்கப்பட்ட சர்வதேச தர சான்றிதழை (ISO) கணியூர் ஊராட்சி மன்ற தலைவர் வேலுச்சாமியிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி வழங்கினார்.

இந்த நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்வேதா சுமன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சரவணன், கணியூர் ஊராட்சி துணைத் தலைவர் ராஜு மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும், சூலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துராஜு, ஹேமலதா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மங்கள சக்தியா, ஊராட்சி செயலர் ஜெகதீசன் மற்றும் பல பணியாளர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...