பொள்ளாச்சியில் வாகனம் ஸ்டார்ட் செய்ய மறுத்ததால் இளைஞர் கொலை - இருவர் கைது

பொள்ளாச்சி வால்பாறை சாலையில் வாகனம் ஸ்டார்ட் செய்ய மறுத்ததால் 21 வயது இளைஞர் அரவிந்த்சாமி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.


Coimbatore: பொள்ளாச்சி வால்பாறை சாலையில் உள்ள ஓம் பிரகாஷ் தியேட்டர் அருகே உடலில் காயங்களுடன் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார், உடலை மீட்டு பரிசோதனை செய்தனர். உடலில் காயங்களும் கத்திக்குத்து காயங்களும் இருந்தது தெரியவந்தது.

போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர் பொள்ளாச்சி ஜே ஜே நகரைச் சேர்ந்த 21 வயதான அரவிந்த்சாமி என்பதும், அவர் ஓட்டுனராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. அரவிந்த்சாமிக்கு திருமணமாகி மனைவி மற்றும் நான்கு மாத பெண் குழந்தை இருப்பதும் தெரியவந்தது.

மேலும் நடத்திய விசாரணையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சூலேஸ்வரன்பட்டி பகுதியைச் சேர்ந்த பைசல் மற்றும் மோதிராபுரம் பகுதியைச் சேர்ந்த விமல் என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த இருவரையும் பொள்ளாச்சி பகுதியில் சுற்றித்திரிந்த நிலையில் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடம் நடத்திய விசாரணையில், அவர்களது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் இல்லாமல் வால்பாறை சாலையில் தள்ளிச் சென்றதாகவும், அப்போது வந்த அரவிந்தை நிறுத்தி வாகனத்தை ஸ்டார்ட் செய்து தருமாறு கேட்டதாகவும் தெரியவந்தது. ஆனால் அரவிந்த் அதற்கு மறுப்பு தெரிவித்து அங்கிருந்து கிளம்ப முயன்றபோது, விமல் மற்றும் பைசல் இருவரும் சேர்ந்து அவரைத் தாக்கி கத்தியால் குத்தியதில் அரவிந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...