கோவையில் உடல் பருமன் விழிப்புணர்வு மாரத்தான்: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்பு அதிகரிப்பு

கோவையில் விஜிஎம் கேஸ்ட்ரோ மருத்துவமனை சார்பில் உடல் பருமன் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. இந்தியாவில் மூன்றில் ஒருவருக்கு உடல் பருமன் பிரச்சினை உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.



Coimbatore: கோவை வ.உ.சி மைதானத்தில் விஜிஎம் கேஸ்ட்ரோ மருத்துவமனை சார்பில் 4வது ஆண்டாக உடல் பருமன் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. மருத்துவமனை நிறுவனர் மற்றும் மருத்துவர் வி.ஜி. மோகன்பிரசாத், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா. கார்த்திக் ஆகியோர் கொடியசைத்து மாரத்தானை தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்வில் 3,200 பேர் பங்கேற்றனர். 10 கிலோமீட்டர், 5 கிலோமீட்டர், 3 கிலோமீட்டர் என மூன்று பிரிவுகளாக ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. வீல்சேர் மாற்றுத்திறனாளிகள் உட்பட ஆண்கள், பெண்கள் பங்கேற்று ஓடினர்.



மாரத்தான் போட்டி வளாகத்தில் மூத்த கேஸ்ட்ரோ என்டரால்ஜிஸ்ட் மருத்துவர் மோகன் பிரசாத் மற்றும் ஆர்த்தோ மருத்துவர் சுமன் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அவர்கள் கூறியதாவது: "இந்தியாவில் மூன்றில் ஒருவருக்கு உடல் பருமன் பிரச்சினை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இது 11% முதல் 30% வரை அதிகரித்துள்ளது. கிராமப்புறத்தை விட நகர்ப்புறத்தினர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்."

"துரித உணவு, சரியான நேரத்தில் உணவு உண்ணாமை, உடற்பயிற்சியின்மை போன்ற நவீன வாழ்க்கை முறையால் மக்கள் பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்கின்றனர். கொழுப்பு படிந்த கல்லீரல், மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் அதிகரித்துள்ளன," என்றனர்.



குழந்தைகளிடையேயும் உடல் பருமன் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்தனர். "முன்பு ஒரு குழந்தை சிகிச்சைக்கு வந்தால், இப்போது ஐந்து குழந்தைகள் வருகின்றனர். உடற்பயிற்சி இன்மை, விளையாட்டு இல்லாமை, அதிக நேரம் செல்போன் பயன்பாடு போன்றவை காரணங்களாக உள்ளன," என்றனர்.

உடல் பருமனால் எலும்பு தேய்மானம், எலும்பு பலவீனம் ஏற்படுவதாகவும், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடற்பயிற்சி, சத்தான உணவு அவசியம் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்தினர்.



இந்த மாரத்தானில் மூத்த கேஸ்ட்ரோ மருத்துவர்கள் வி.ஜி. மோகன்பிரசாத், கோகுல் கிருபா சங்கர், ஆர்தோ மருத்துவர் சுமன், கேஸ்ட்ரோ மருத்துவர்கள் மதுரா சுமன், வம்சி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...