கோவை பெரியநாயக்கன்பாளையம் காடுகளில் 300 CRPF அதிகாரிகள் 7 நாள் வனவாழ்க்கை பயிற்சி

கோவை பெரியநாயக்கன்பாளையம் பாலமலை காடுகளில் 300 CRPF அதிகாரிகள் 15 குழுக்களாக பிரிந்து 7 நாட்கள் வனவாழ்க்கை பயிற்சியில் ஈடுபட்டனர். அடிப்படை வசதிகளின்றி காட்டில் உயிர்வாழ்தல், தீவிரவாதிகளை கண்காணித்தல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன.



Coimbatore: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை வனப்பகுதியில் 300 CRPF (Central Reserve Police Force) பயிற்சி அதிகாரிகள் 7 நாட்கள் தங்கி வனவாழ்க்கை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லியிலிருந்து கோவைக்கு வந்துள்ள இந்த CRPF வீரர்கள், 45 நாட்கள் கோவை ராக்கி பாளையத்தில் உள்ள இராணுவ பயிற்சி பள்ளி வளாகத்தில் பல்வேறு பயிற்சிகளை பெற்றனர். அதன் தொடர்ச்சியாக, தற்போது வனப்பகுதியில் நடைபெறும் இந்த பயிற்சியில் 300 அதிகாரிகள் 15 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர்.



பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை அடர்ந்த வனப்பகுதியில் தற்காலிக கொட்டகைகள் அமைத்து இந்த அதிகாரிகள் தங்கியுள்ளனர். வனப்பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி, அங்கு கிடைக்கும் பொருட்களைக் கொண்டு உயிர் வாழ்வது, காடுகளுக்குள் ஊடுருவும் தீவிரவாதிகள் மற்றும் நக்சலைட்களை கண்காணிப்பது, காடுகளில் உயிர் பிழைப்பது, மனித மற்றும் விலங்குகள் நடமாட்டம் பற்றி அறிவது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.



இந்த 7 நாள் பயிற்சியில், அதிகாரிகளுக்கு அடிப்படை தேவைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அவர்கள் காடுகளில் எவ்வாறு தங்களை தக்க வைத்துக் கொள்வது என்பதை அனுபவபூர்வமாக கற்றுக்கொள்கின்றனர்.



CRPF தலைமை உதவி ஆணையர் மற்றும் கமாண்டர் ஏகே அனாஸ் தலைமையில் இந்த பயிற்சி நடைபெறுகிறது. இந்த வனவாழ்க்கை பயிற்சி CRPF அதிகாரிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...