பொள்ளாச்சியில் மருத்துவர்களுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பயிற்சி

பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை முறைகள் பற்றிய பயிற்சி மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்டது. பல்வேறு துறை மருத்துவர்கள் இதில் பங்கேற்றனர்.


கோவை: பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்த பயிற்சி மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்டது. இருப்பிட மருத்துவ அலுவலர் டாக்டர் மாரிமுத்து தலைமையில் இந்த பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் பொள்ளாச்சி இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் சக்திவேல், செயலாளர் டாக்டர் சௌந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், பல தனியார் மருத்துவர்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர்கள் இந்த பயிற்சி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தற்போதைய மழைக்காலத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அதனை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது. டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்கும்போது, மரணம் மற்றும் நீர் இழப்பு அபாயம் ஏற்படாமல் தடுப்பது குறித்தும், ஆரம்ப கட்டத்தில் எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது பற்றியும் விளக்கப்பட்டது.



மேலும், எந்த வகையான நோயாளிகளை பெரிய மருத்துவமனைகளுக்கு ஆரம்ப கட்டத்திலேயே தொடர் சிகிச்சைக்காக அனுப்ப வேண்டும் என்பது குறித்தும் இந்த பயிற்சி நிகழ்ச்சியில் விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த பயிற்சி நிகழ்ச்சி, மருத்துவர்களிடையே டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, சிறந்த சிகிச்சை அளிப்பதற்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...