தற்காப்புக்காக ரவுடி ஆல்வின் மீது துப்பாக்கிச் சூடு: கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் விளக்கம்

கோவையில் ரவுடி ஆல்வின் காவலர் மீது கத்தியால் தாக்கியதால், தற்காப்புக்காக உதவி ஆய்வாளர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இரு தரப்பினரும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.



கோவை: கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் காவலர் குடும்பத்தினருக்கு நடைபெற்ற யோகா பயிற்சி நிறைவு விழாவில் கலந்து கொண்ட கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது, இன்று அதிகாலை கொடிசியா மைதானத்தில் ரவுடி ஆல்வின் சுட்டுப் பிடிக்கப்பட்டது குறித்து விளக்கமளித்தார்.



ஆல்வின் மீது 3 கொலை, 2 கொலை முயற்சி உள்ளிட்ட 15 வழக்குகள் இருப்பதாக தெரிவித்த காவல் ஆணையர், கடந்த ஆண்டு ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஆல்வின் மீது NBW (Non-bailable Warrant) பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் கூறினார். இதையடுத்து, மூன்று, நான்கு மாதங்களாக தனிப்படை காவல்துறையினர் பல்வேறு இடங்களில் ஆல்வினை தேடி வந்ததாகவும், 15 நாட்களுக்கு முன்பு வேறு மாநிலத்தில் தங்கி இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் அவரை பிடிக்கச் சென்ற போது தப்பிச் சென்று விட்டதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று அதிகாலை கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கொடிசியா பகுதியில் ஆல்வினை காவலர்கள் பிடிக்க முற்பட்டபோது, அவர் தலைமை காவலர் ராஜ்குமாரை கத்தியால் தாக்கியதாக காவல் ஆணையர் கூறினார். இதனையடுத்து, தற்காப்புக்காக உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் ஆல்வினை காலில் சுட்டதாகவும் தெரிவித்தார். தற்போது காயம் பட்ட தலைமை காவலரும் சுடப்பட்ட குற்றவாளியும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், சரித்திர பதிவேடு குற்றவாளிகள் தொடர்ச்சியாக குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருவதை கண்காணித்து தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...