பெட்டி கடை அமைக்க காவல் துறை ஆய்வாளர் பணம் கேட்பதாக பார்வையற்ற இளைஞர் ஆட்சியரிடம் புகார்


அக்டோபர் 30: உக்கடம் பேருந்து நிலையத்தில் பெட்டி கடை அமைக்க காவல் துறை ஆய்வாளர் பணம் கேட்பதாக பாதிக்கப்பட்ட பார்வையற்ற இளைஞர் பத்ரன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.

கோவை மாவட்டம், உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் பத்ரன். இவருக்கு உக்கடம் பேருந்து நிலையத்தில் பெட்டி கடை வைக்க அனுமதி வழங்கிய மாநகராட்சி நிர்வாகம், மாற்றுத் திறனாளிகள் உதவி தொகையின் கீழ் கடை வைக்க 30 ஆயிரம் ரூபாய் நிதியும் வழங்கியது.

இதனைத்தொடர்ந்து, கடை அமைக்க உக்கடம் காவல் நிலையத்தில் தடையின்மை சான்று கேட்டு தொடந்து பல முறை அவர் மனு அளித்தும் காவல் துறையினர் அனுமதி மறுத்து வருவதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், இன்று பத்ரன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் உக்கடம் காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் தன்னிடம் தடையின்மை சான்று வழங்க பணம் கேட்டு வருகிறார். மாவட்ட ஆட்சியர் இப்பிரச்சனையில் தலையிட்டு உக்கடம் பேருந்து நிலையத்தில் கடை அமைக்க அனுமதி பெற்றுத்தருவதுடன், சம்மந்தப்பட்ட காவல் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அம்மனுவில் தெரிவித்துள்ளார்.

Newsletter

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...