கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடியவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறக் கோரி மனு

கோவை, அக்டோபர் 30-  கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடியவர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெறக் கோரியும், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் முகிலனை விடுதலை செய்யக் கோரியும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சுற்றுசூழல் ஆர்வலர்களுடன் மாவட்ட அட்சியரிடம் மனு அளித்தனர்.



இன்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன்  செய்தியாளர்களிடம்  கூறியதாவது:-

"சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் முகிலன் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளார். காவிரி படுகையில் மணல் கடத்தல், கூடங்குளம் அணு உலை, கனிமவளங்கள் கடத்தல், இதர ஆறுகளில் மணல் கொள்ளை போன்ற செயல்களுக்கு எதிராக போராடி வரும் அவரை சட்டவிரோத செயல்களை செய்பவர்களுக்கு ஆதரவாக காவல் துறை கைது செய்துள்ளது. உடனடியாக முகிலனை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், கூடங்குளத்தில் போராடியதற்காக பொதுமக்கள் மீது பதியப்பட்ட 132 வழக்குகளையும் திரும்பப் பெற நீதிமன்றம் அறிவுறுத்தியும் இது வரை வழக்குகள் திரும்பப் பெறப்படவில்லை. வழக்குகளை திரும்பப் பெற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

Newsletter

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...