இந்து பிரமுகர் கொலையால் பதற்றம்

பெங்களூருவில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைச் சேர்ந்த ஒருவர் மர்ம நபர்களால் நேற்று படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து பெங்களூருவின் முக்கிய இடங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆர். ருத்ரேஷ் என்பவர், சிவாஜிநகர் சகா பகுதியின் ஆர்எஸ்எஸ் மண்டல தலைவராகவும், ஷிவாஜி நகர் பா.ஜ., செயலாளராகவும் உள்ளார். நேற்று இரவு, அவரது வீடருகே பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர்,, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் அவரை வெட்டிக் கொலை செய்து விட்டு, தப்பிச் சென்றுள்ளனர். இவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்து அமைக்களைச் சேர்ந்த பிரமுகர்கள் கொலை செய்யப்படுவது தொடர்கதையாகி வருவதால் பெங்களூருவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பெங்களூருவின் முக்கியமான 4 இடங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சிவாஜிநகரில் இந்து அமைப்பினர் பந்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் கேரளாவில் பா.ஜ., பிரமுகர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து மாநிலம் தழுவிய முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. காவிரி பிரச்னை தொடர்பான பதற்றம் தணிந்து வருவதால் பெங்களூருவில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலையால் மீண்டும் பதற்ற நிலை உருவாகி உள்ளது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...