போனஸ் வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு அளித்த துப்புரவு தொழிலாளர்கள்

கோவை மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவரும் துப்புரவு தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழக்கக் கோரி அப்பணியாளர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

இதைத்தொடர்ந்து, அவர்களுடன் வந்த தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் சங்கத்தின் மாநில ஆலோசகர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவையில் 2500க்கும் மேற்பட்ட ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 6 முதல் 8 வருடம் பணியாற்றி வரும் இவர்களுக்கு மாத ஊதியமாக 6000 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. மருத்துவக் காப்பீடு உள்ளிட்டு வேறு எவ்வித சலுகைகளும் இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. கடந்த வருடம் இவர்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.1000 மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதுவும் தீபாவளி முடிந்து பின் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த வருடத்திற்கான தீபாவளி போனஸ் குறித்து இன்னும் பேசப்படவில்லை. எனவே, ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு இந்த வருடம் இரண்டு மாத ஊதியம் போனஸாக வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு இதற்கு தீர்வு காண வேண்டும் என்றார். 

இதனிடையே, ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் திடீரென திரண்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...