ராணுவ வீரர்களுக்கான ஆட்தேர்வு முகாம்- கோவையில் குவிந்த இளைஞர்கள்

கோவையில் ராணுவ வீரர்களுக்கான ஆட்தேர்வு முகாம் புதனன்று (இன்று) துவங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இளைஞர்கள் கோவையில் குவிந்துள்ளனர்.

சென்னை 110 ராணுவ பட்டாலியன் மேற்பார்வையில் பிராந்திய ராணுவப்படை வீரர்களுக்கான ஆட்தேர்வு முகாம், கோவை காவலர் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் புதனன்று அதிகாலை துவங்கியது. இதில் தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பாண்டிச்சேரி என இராஜஸ்தான் முதல் லக்க்ஷதீப் வரை உள்ள 14 மாநிலங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்தி 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். 

முன்னதாக தேர்வில் கலந்துகொள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் மைதானத்தை சுற்றி காத்திருந்ததால் காவல் துறையினர் அவர்களை கட்டுப்படுத்தும் பணியில் செவ்வாயன்று இரவு முதல் ஈடுபட்டனர். கர்னல்.லோகநாதன் தலைமையில் நடத்தப்பட்டு வரும் இம்முகாமில், முதற்கட்டமாக இளைஞர்களின் உடற்தகுதி தேர்வான ஓட்டப் பந்தயம், நீலம் தாண்டுதல் போன்ற தேர்வுகள் நடத்தப்படுவதுடன் அவர்களின் எடை, உயரம் உள்ளிட்ட உடற்தகுதிகளும் மற்றும் கல்விச் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இன்று நடைபெறும் தேர்வில், தேர்ச்சிபெறும் இளைஞர்கள் அடுத்து மருத்துவ சோதனைகள் மற்றும் நேர்முக தேர்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்ற 23 ஆம் தேதிக்குள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 

4 ஆயிரத்தி 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ள இந்த பிராந்திய ராணுவப் படை வீரர்களுக்கான தேர்வில் 23 வீரர்களும், ஒரு ராணுவ மெஸ் பணியாளரும் தேர்வு செய்யப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...