விக்கிரவாண்டி அருகே பரபரப்பு தண்டவாளத்தில் விரிசல் 4 ரயில்கள் தப்பின: இன்ஜின் டிரைவர் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்ப்பு

விக்கிரவாண்டி: விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டி அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட திடீர் விரிசல் காரணமாக 4 எக்ஸ்பிரஸ் ரயில்கள் தப்பின விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் - விழுப்புரம் இடையே வி.சாலை என்ற இடத்தில் 148வது கி.மீ பாயிண்டில் ரயில்வே தண்டவாளத்தில் நேற்று அதிகாலை விரிசல் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 3 மணியளவில் சென்னை நோக்கி சென்ற ரயில் இன்ஜின் டிரைவர் இதனைப்பார்த்து பேரணி பகுதி ரயில் நிலைய அதிகாரிக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து ரயில்வே ஊழியர்கள் வந்து விரிசல் ஏற்பட்ட தண்டவாளப்பகுதியை தற்காலிகமாக சரி செய்தனர். அப்போது சென்னை நோக்கி வந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 200 மீட்டர் தூரத்தில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அவ்வழியே வந்த கன்னியாகுமரி, குருவாயூர், மலைக்கோட்டை மற்றும் விழுப்புரம் - சென்னை இடையே இயக்கப்படும் யூனிட் ரயில் ஆகியவையும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. 

சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின் தற்காலிகமாக தண்டவாளம் சீரமைக்கப்பட்ட பின்னர் ரயில்கள் சுமார் 30 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டன.  யாரும் கவனித்திருக்காவிட்டால் பெரிய அளவில் விபத்து நடந்திருக்கும். அதிர்ஷ்டவசமாக ரயில் இன்ஜின் டிரைவர் கவனித்து சாமர்த்தியமாக தகவல் தெரிவித்ததால் 4 ரயில்கள் பெரும் விபத்தில் இருந்து தப்பின. விசாரணையில் தட்ப வெப்பநிலை மாற்றம் மற்றும் அதிர்வு காரணமாக தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதாக தெரிகிறது.

Newsletter

வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் - ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெ...

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...