500, 1000 ரூபாய் கள்ளநோட்டுகள் தாராளமாக புழங்குவதால் எச்சரிக்கை தேவை: ரிசர்வ் வங்கி அறிவுரை

500, 1000 ரூபாய் கள்ளநோட்டுகள் தாராளமாக புழங்குவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பண்டிகை காலங்களில் கள்ளநோட்டு புழக்கம் அதிகம் என்பதால் 500, 1000 போன்ற நோட்டுகளை கையாளும் போது கவனத்துடன் இருக்குமாறு மக்கள் கேட்டுகொள்ளப்பட்டுள்ளனர். மக்களின் அவசர மனப்பான்மையை பயன்படுத்தி சமூக விரோத சக்திகள் கள்ளநோட்டுகளை அதிக அளவில் புழக்கத்தில் விட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி உயரதிகாரிகள் மும்பையில் தெரிவித்துள்ளனர்.

நல்ல நோட்டுகளில் அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதால் கள்ளநோட்டுகளை எளிதில் கண்டுகொள்ள முடியும் என்ற அவர்கள் தேவையானால் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் இது குறித்த வழிகாட்டல்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு முறை ரூபாய் நோட்டுகளை கையாளும் போது அவற்றை ஆராய வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்திய ரூபாய் நோட்டுகளில் ஏற்கனவே அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்கள் இருந்தாலும், மேலும் புதிய அம்சங்களை சேர்பது பற்றி ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...