சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு



கோவை மாவட்டம், நீலிக்கோணாம்பாளையத்தை அடுத்த அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி ஜெயநாயகி (67). புதனன்று இரவு 9 மணியளவில் இவர் தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர், ஜெயநாயகி கழுத்தில் அணிந்திருந்த 5.5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயநாயகி கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் அப்பகுதியில் திரண்டனர். அதற்குள், அந்த மர்ம நபர் இரு சக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் சென்று மறைந்தார். இதுகுறித்து, ஜெயநாயகி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சிங்காநல்லூர் காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

அதேப்போல், கடந்த திங்கள்கிழமை டாடாபாத் பகுதியைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவரிடம் 7 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். மேலும், கோவையில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சாலையில் நடந்து சென்ற 8 பேரிடம் மர்ம நபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...