ஏழை, எளிய மக்களின் இல்லக் கனவை நனவாக்கிய அம்மா சிமெண்ட் சிறப்பு குறித்து மக்கள் கருத்து


ஏழைகளின் கனவுகள் நனவாக வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு சலுகை விலையில் ரூ.190-க்கு அம்மா சிமெண்டை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதியன்று அறிவித்தார். அதனடிப்படையில் வீடு கட்டும் பொருட்களில் முக்கியமானதாக விளங்கும் சிமெண்டினை குறைந்த விலையில் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கும் வகையில் அம்மா சிமெண்ட் அறிமுகப்படுத்தப்பட்டு ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அம்மா சிமெண்ட் விநியோகத் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 1500 சதுர அடிக்குள் வீடு கட்டினால் மலிவு விலையில் அதிகபட்சமாக அம்மா சிமெண்ட் 750 மூட்டைகள் வழங்கப்படும். அதாவது 500 சதுர அடி வரை கட்டப்படும் வீடுகளுக்கு 250 மூட்டைகள், 501 முதல் 1000 சதுர அடி வரை கட்டப்படும் வீடுகளுக்கு 500 மூட்டைகள். 1001 முதல் 1500 சதுர அடி வரை கட்டப்படும் வீடுகளுக்கு அதிகபட்சமாக 750 மூட்டைகள் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் வீடுகள் பழுது பார்க்கும் பணிக்கும் 10 மூட்டை முதல் அதிகபட்சமாக 100 மூட்டை வரை வழங்கப்படும். 100 சதுர அடிக்கு 50 மூட்டைகள் என்ற விகிதாச்சாரப்படி வழங்கப்பட்டு வருகிறது. இதனைப் பெற வீடு கட்டுவதை உறுதி செய்யும் பொருட்டு வீட்டின் வரைப்பட அங்கீகாரம் அல்லது கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மேற்பார்வையாளர் அல்லது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாலை ஆய்வாளரின் சான்று ஆவணங்கள் அல்லது சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றினை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.



கோவை மாவட்டத்தில் இதுவரை புதிதாக வீடுகட்ட மற்றும் இதர பணிகளுக்காக காரமடை ஊராட்சியில் 74721 மூட்டைகள், பெரியநாயக்கன்பாளையத்திம் ஒன்றியத்தில் 32074 மூட்டைகள், சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் 23130 மூட்டைகள், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 48236 மூட்டைகள், ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தில் 87675 மூட்டைகள் என ஒட்டுமொத்தமாக ரூ.12.41 கோடி மதிப்பீட்டில் 6 லட்சத்து 53 ஆயிரத்து 331 மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டள்ளது.

இதுகுறித்து இத்திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்கள் தெரிவித்ததாவது:-

எனது பெயர் மல்லிகா, நான் மதுக்கரை ஊராட்சி ஒன்றியம் சீரப்பாளையம் ஊராட்சியில் வசித்து வருகிறேன். நானும் எனது கனவரும் கூலிக்கு வேலை செய்து வருகிறோம். இதுநாள் வரை ஒட்டு வீட்டில் தான் வாழ்ந்து வந்தோம். நீண்ட நாட்களாக வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் ‘அம்மா சிமெண்ட்’  வெறும் 190 ரூபாய்க்கு வழங்கி வருகிறார்கள். இது எங்களைப் போன்ற ஏழை, எளிய மக்களுக்கு உதவியாக இருக்கிறது. தற்போது 900 சதுர அடி பரப்பில் வீடு கட்டி வருகிறோம். வீடு கட்டிமுடிப்பதற்கு தற்போது சுமார் 400 மூட்டை சிமெண்ட் தேவைப்படுகிறது. சிமெண்ட் மூட்டை வெளிசந்தையில் வாங்கும் போது ஒரு மூட்டைக்கு சிமெண்ட் ரூ.380 என 400 சிமெண்ட் மூட்டைகளுக்கு மொத்தம் 1 லட்சத்து 52 ஆயிரம் ஆகும். ஆனால், தமிழக அரசின் கீழ் மானிய விலையில் விற்கப்படும் சிமெண்ட் மூட்டை ஒன்றுக்கு ரூ.190 வீதம் என 400 சிமெண்ட் முட்டைக்கு ரூ.76 ஆயிரம் மட்டுமே செலவாகிறது என்றார்.



தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள அம்மா சிமெண்ட் திட்டம் மூலம் ஏழை, எளிய மக்களின் வீடு கட்டும் சுமை வெகுவாக குறைந்துள்ளன. ஏழை, எளிய மக்களின் கனவை நனவாக்கும் வகையில் செயல்படுத்தப்படும் இதுபோன்றத் திட்டம் சிறப்பாகவே திகழ்கிறது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...