டாஸ்மாக் கடைகளில் விற்பனையை முறைப்படுத்தக்கோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மனு



தமிழக அரசின் கீழ் இயங்கிவரும் டாஸ்மாக் மதுக்கடையில் விற்பனையை முறைப்படுத்தக்கோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் கோவை மாவட்டக் குழுவின் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



அம்மனுவில் கூறியிருப்பதாவது:- ''கோவை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் 24 மணி நேரமும் எவ்வித தடையுமின்றி மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. தமிழக அரசு படிப்படியாக மது விற்பனையை குறைப்பது என்ற அறிவிப்பும் எவ்வித அவசரமும் இன்றி சாவகமாக நடைமுறைப்படுத்தப்படும் நிலையில் மதுக்கடைகளை படிப்படியாக மூடுவது ஒருபுறமிருந்தாலும் சட்டத்தை சரிவர அமல்படுத்தி சட்டப்படி குறந்தபட்சம் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டும் மதுபானம் விற்பனை செய்ய வேண்டும்.

தற்போது மது விற்பனைக்கு நிர்ணயக்கப்பட்டுள்ள கால அளவு கடைபிடிக்கப்படாததாலும், அரசு மது விற்பனையை நாளுக்கு நாள் உயர்த்த ஆர்வமிக்க திறமையான அதிகாரிகளைக்கொண்டு திட்டமிட்டு இலக்கு நிர்ணயித்து, நிர்ணயித்த அளவிற்கு மேலும் முறையற்று விற்பனை செய்வதாலும், அன்றாடம்  கூலி வேலை செய்து தங்களது வாழ்வை நடத்தும் ஏழை மக்களும், அவர்களது குழந்தைகளும் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.

எனவே, இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி மதுபானம் விற்பனை செய்யும் துறையில் அனுமதிக்கப்பட்ட காலநேரம் தவிர மற்ற நேரங்களில் மது விற்பனையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் கோவை மாவட்ட துணைத் தலைவர் சக்திவேல் கூறுகையில், 

''அதிமுக பதவிக்கு வந்தவுடன் தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், சில கடைகள் மூடப்பட்டன. மேலும், மதுவிற்பனைக் கடைகளில் நேரமும் குறைக்கப்பட்டன. ஆனால், தற்போது எந்த டாஸ்மாக் மதுபான விற்பனைக் கடைகளிலும் நேரம் கடைபிடிக்கப்படுவதில்லை. இரவு, பகல் பார்க்காமல் கூடுதல் நேரத்தில் மது விற்பனை நடைபெருகிறது. ஆளுங்கட்சியினரே பெரும்பாலான டாஸ்மாக் கடைகளை நிர்வகித்து வருவதால் சட்டங்களை பின்பற்றுவதில்லை என கூறப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் இதில் உரிய கவணம் செலுத்தி மதுபான விற்பனை முறைகேட்டை கட்டுப்படுத்த வேண்டும்'' என்றார்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...