பாதாள சாக்கடைக்கான வைப்புத் தொகையை பழைய 500, 1000 ரூபாயால் செலுத்தலாம்- மாநகராட்சி ஆணையர் தகவல்

கோவை மாநகராட்சியில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய பாதாளச் சாக்கடைக்கான வைப்புத் தொகையை பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செலுத்தி இணைப்புகள் பெற்றுக்கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

''கோவை மாநகராட்சிக்குட்பட்ட கீழ்கண்ட வார்டுகளில் ஜவஹர்லால் நேரு புனரமைப்பு திட்டத்தின் கீழ் கோவை மேற்கு, வடக்கு, மத்திய மண்டலம், கிழக்கு, தெற்கு உள்ளிட்ட பகுதிகளில் பாதாளச் சாக்கடைத் திட்டம் நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் உள்ள வீட்டு உரிமையாளர்களை பாதாள சாக்கடை இணைப்பு பெற மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொகையினை பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை செலுத்தி இணைப்புகள் பெற்றுக்கொள்ளலாம். 

மேலும், நவம்பர் 17ம் தேதி முதல் மேற்கு மண்டல பகுதிகளுக்கு 12 வது வார்டில் உள்ள சிந்தாமணி நகர் வரிவசூல் மையத்தில் தொகை செலுத்தலாம். தெற்கு மண்டலத்தில் உள்ள பொன்னையராஜாபுரம் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்திலும் பாதாள சாக்கடை இணைப்பு தொகையை செலுத்தி இரசீது பெற்றுக் கொள்ளலாம். 

மேலும், பாதாளச் சாக்கடை பணி முடியும் தருவாயில் உள்ள பழைய மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய பாதாள சாக்கடைக்கான வைப்புத் தொகையை பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செலுத்தி இணைப்புகள் பெற்றுக்கொள்ளலாம். பணிகள் முடிவடைந்ததும் இணைப்புகள் வழங்கப்படும். செலுத்தும் வைப்புத் தொகையில் மாறுதல் ஏற்படும் பொழுது அதற்கு ஏற்றவாறு பிறகு தொகையை செலுத்த வேண்டும். மேலும், வைப்புத் தொகையை அனைத்து மாநகராட்சி மண்டல அலுவலகத்திலும் மற்றும் சிறப்பு முகாம்களிலும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை செலுத்தி இரசீது பெற்றுப் கொள்ளலாம்'' என க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...