பாதாள சாக்கடைக்கான வைப்புத் தொகையை பழைய 500, 1000 ரூபாயால் செலுத்தலாம்- மாநகராட்சி ஆணையர் தகவல்

கோவை மாநகராட்சியில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய பாதாளச் சாக்கடைக்கான வைப்புத் தொகையை பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செலுத்தி இணைப்புகள் பெற்றுக்கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

''கோவை மாநகராட்சிக்குட்பட்ட கீழ்கண்ட வார்டுகளில் ஜவஹர்லால் நேரு புனரமைப்பு திட்டத்தின் கீழ் கோவை மேற்கு, வடக்கு, மத்திய மண்டலம், கிழக்கு, தெற்கு உள்ளிட்ட பகுதிகளில் பாதாளச் சாக்கடைத் திட்டம் நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் உள்ள வீட்டு உரிமையாளர்களை பாதாள சாக்கடை இணைப்பு பெற மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொகையினை பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை செலுத்தி இணைப்புகள் பெற்றுக்கொள்ளலாம். 

மேலும், நவம்பர் 17ம் தேதி முதல் மேற்கு மண்டல பகுதிகளுக்கு 12 வது வார்டில் உள்ள சிந்தாமணி நகர் வரிவசூல் மையத்தில் தொகை செலுத்தலாம். தெற்கு மண்டலத்தில் உள்ள பொன்னையராஜாபுரம் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்திலும் பாதாள சாக்கடை இணைப்பு தொகையை செலுத்தி இரசீது பெற்றுக் கொள்ளலாம். 

மேலும், பாதாளச் சாக்கடை பணி முடியும் தருவாயில் உள்ள பழைய மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய பாதாள சாக்கடைக்கான வைப்புத் தொகையை பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செலுத்தி இணைப்புகள் பெற்றுக்கொள்ளலாம். பணிகள் முடிவடைந்ததும் இணைப்புகள் வழங்கப்படும். செலுத்தும் வைப்புத் தொகையில் மாறுதல் ஏற்படும் பொழுது அதற்கு ஏற்றவாறு பிறகு தொகையை செலுத்த வேண்டும். மேலும், வைப்புத் தொகையை அனைத்து மாநகராட்சி மண்டல அலுவலகத்திலும் மற்றும் சிறப்பு முகாம்களிலும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை செலுத்தி இரசீது பெற்றுப் கொள்ளலாம்'' என க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...