விஜய் மல்லையாவுக்கு கடன் தள்ளுபடி செய்த எஸ்பிஐ வங்கியைப் பாராட்டி சமூக நீதிக்கட்சி நூதன போராட்டம்

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் விஜய் மல்லையா பெற்றுள்ள ரூ.1,201 கோடி கடன் தொகை உட்பட 63 பெருங்கோடீஸ்வர பண முதலைகளின் சுமார் ரூ.7,016 கோடியை தள்ளுபடி செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்து மக்களை வஞ்சித்து வரும் இந்நிலையில், பண முதலைகளின் கோடிக்கணக்கான கடனை தள்ளுபடி செய்யும் விவகாரம் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயக் கடன், ஏழை மாணவர் கல்விக் கடன் என சாதாரண ஏழை, எளிய மக்கள் பெற்றுள்ள வங்கிக் கடனில் சிறிதும் சலுகையின்றி கடுமையான வசூலில் ஈடுபடும் வங்கிகள், விஜய் மல்லையா உள்ளிட்டோருக்கு வழங்கியுள்ள கடன் தள்ளுபடிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே கண்டனப் போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் சமூக நீதிக் கட்சியின் சார்பாக ஆயிரக் கணக்கான கோடி ரூபாய்யை ஏமாற்றிய ஏழை விஜய் மல்லையாவின் கடன் தள்ளுபடியைப் பாராட்டி ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைமை அலுவலகத்தின் பொது மேலாளரிடம் மலர் கொத்து வழங்கி நூதன முறையில் கண்டனத்தை வெளிப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இதன்படி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிற்கு சென்ற சமூக நீதிக் கட்சியினரை தடுத்து நிறுத்திய காவல் துறையினர் அவர்களை கைது செய்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...