சிங்கப்பூரில் போதை மருந்து கடத்திய இருவருக்குத் தூக்கு

சிங்கப்பூரில் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட வெளிநாட்டவர் இருவரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை உடனடியாக நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர் சிஜியோக் ஸ்டீபன் ஒபியோகா, (38). கால்பந்து வீரராக சிங்கப்பூருக்கு வந்த அவர் கடந்த 2008-ஆம் ஆண்டு 2.7 கிலோ போதைப் பொருள் கடத்திய வழக்கில் பிடிபட்டார்.
அதேபோல், மலேசியாவைச் சேர்ந்த தேவேந்திரன் சுப்ரமணியம் (31). கடந்த 2011-ஆம் ஆண்டு மே மாதம் 2.7 கிலோ போதைப் பொருள் கடத்தியதாக இவர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. அதில், 83.36 கிராம் ஹெராயின் போதை மருந்தாகும்.
சிங்கப்பூர் சட்டப்படி 500 கிராமுக்கு மேல் போதை மருந்து வைத்திருந்து பிடிபடும் நபருக்கு தயவுதாட்சண்யமின்றி மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
அந்த வகையில் 2.7 கிலோ போதைப் பொருளை வைத்திருந்ததைத் தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. கடைசி வாய்ப்பாக தூக்கு தண்டனையிலிருந்து தப்பிக்க, இருவரும் சிங்கப்பூர் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். இவர்களது கருணை மனு வியாழக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, அவர்கள் இருவருக்கும் வியாழக்கிழமை தூக்கு தண்டனை உடனடியாக நிறைவேற்றப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கொலை, போதை மருந்து கடத்தலுக்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது.

Newsletter

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...